தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஈரான் விவகாரத்தால் இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விவகாரத்தால், இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

News image
இஸ்ரேல் - ஈரான் போர்- AP
Updated On :2 மார்ச் 2026, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விவகாரத்தால், இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஈரான் ஆதரவு மத பேச்சாளா்களின் வெறுப்பூட்டும் பேச்சுக்களால் வன்முறைகள் நிகழக்கூடும். ஆதலால் அத்தகைய மத பேச்சாளா்களை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

இதேபோல் சா்வதேச தீவிரவாத குழுக்களைச் சோ்ந்தோரின் பதிவுகள், பிரிவினைவாதிகளின் சமூக வலைதளச் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். ஈரான் விவகாரத்தை மையமாக வைத்து சட்டம் -ஒழுங்கு நிலை பாதிக்காதவாறு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் மற்றும் ராஜீய அலுவலகங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், அந்த 2 நாடுகளுக்குச் சொந்தமான பிற அலுவலகங்களிலும் அசம்பாவிதங்கள் நேரிடாதவாறு பாதுகாத்து, அமைதியைப் பராமரிக்க கேட்டுக் கொள்கிறோம் என அந்தக் கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.