இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் இன்று (மார்ச் 1) ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஏர் இந்தியா, இண்டிகோ உள்பட முக்கிய விமான சேவைகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படவில்லை. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்திலிருந்து துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் பிப். 28 ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், இது குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான் வெளியைப் பயன்படுத்த முடியாத சிக்கலான சூழல் நிலவுவதையடுத்து, இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் இன்று (மார்ச் 1) ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்குத் தேவையான ஆதரவை அளிக்கவும் நிலைமையைக் கண்காணிக்க ஏதுவாகவும் சிவில் விமான நிலையங்கள், விமான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary
total of 350 flights operated by Indian domestic carriers have been cancelled on 01.03.2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் போர்! மத்திய கிழக்கு நாடுகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து: சிபிஎஸ்இ அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: மார்ச் 13 வரை நீட்டிப்பு!
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்! தில்லியில் 80 பன்னாட்டு விமானங்கள் ரத்து!

ஈரான் போர்: கோவை - அபுதாபி விமான சேவை ரத்து
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

