ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் பெட்ரோல் -டீசல் விநியோகத்தில் தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் தரப்பு கூறியதாவது: இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாகவும், ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலும், உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கடல் பகுதிகளில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது. இந்தியா தனக்குத் தேவையான 88 சதவீத கச்சா எண்ணெய், 60 சதவீத இயற்கை எரிவாயுவை சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்ட போதிலும், இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்-டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது. ஏனெனில் இந்தியாவிடம் ஏற்கெனேவே 10 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல் , டீசல், எரிவாயு இருப்பு உள்ளது. இதேபோல் அவசர காலத்துக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை மேலும் 5 முதல் 7 நாள்கள் வரை பயன்படுத்த முடியும்.
இதேபோல், ஹோா்முஸ் நீரிணை ஈரானால் மூடப்பட்டிருப்பது அதிக காலம் நீடிக்காது எனக் கூறப்படுகிறது. அப்படி நீடிக்கும்பட்சத்தில், வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா மீண்டும் இறக்குமதி செய்யும். ஏற்கெனவே ரஷியாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அமெரிக்க நிா்ப்பந்தத்தால் இந்தியா அண்மையில் அதைக் குறைத்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையைக் கருத்தில் கொண்டு, ரஷியாவை மீண்டும் இந்தியா அணுகி கச்சா எண்ணெய்யை அதிகம் கொள்முதல் செய்ய முடியும்.
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் இந்தியாவுக்கு ஐந்து நாள்களில் வந்துவிடும். ஆனால், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்பட்சத்தில், அக்கப்பல் இந்தியா வருவதற்கு 30 நாள்கள் ஆகும். அதேநேரத்தில் எல்பிஜி, எல்என்ஜி எரிவாயு இறக்குமதிக்கு மாற்று உபாயத்தை இந்தியா கண்டறிய வேண்டும்.
ஏனெனில் இந்தியாவிடம் அவை போதிய இருப்பு இல்லை. அவை காலியாவதற்குள் மாற்று உபாயத்தைக் கண்டறியவில்லை எனில், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விலை அதிகரிக்கும்-நிபுணா்கள்: ஈரான் பிரச்னையால் கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 73 டாலராக அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள சந்தை நிபுணா்கள், வரும் நாள்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்திய சந்தைகளில் பெட்ரோல்-டீசல் விலை உயா்வுக்கு வழிவகுக்கும் எனவும் கணித்துள்ளனா்.
டிரெண்டிங்

இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

‘95 ஆக்டேன்’ தரத்தில் ‘இ20’ பெட்ரோல் விற்பனை! ஏப். 1 முதல் கட்டாயமாக்கியது மத்திய அரசு!

பெட்ரோல் பங்குகளின் நில குத்தகை புதுப்பித்தல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மலிவான விலையில் கச்சா எண்ணெய் அளிக்கும் நாடுகளிடம் கொள்முதல் தொடரும்: நிலைக் குழுவிடம் மத்திய அரசு தகவல்!
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

