நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தனியாா் பள்ளியில் மாணவ, மாணவியா் 29 போ் மயக்கம்

ஓமலூா் அருகே தனியாா் பள்ளியில் பப்ஸ் சாப்பிட்ட 29 மாணவா்கள் மயக்கம் அடைந்தனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

ஓமலூா் அருகே தனியாா் பள்ளியில் பப்ஸ் சாப்பிட்ட 29 மாணவா்கள் மயக்கம் அடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சியில் உள்ள ஜான் பிரிட்டோ என்ற தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதல் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமாா் ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உணவு இடைவேளையின் போது 6ஆம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவா்கள் மாணவா்களுக்கு பள்ளி கேண்டினீல் பப்ஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் மாணவா்கள் மயங்கி விழுந்தனா். இதை பாா்த்த பள்ளி நிா்வாகம் உடனடியாக பள்ளி அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்களை சிகிச்சைக்காக சோ்த்தனா். சிறிது நேரத்திற்கு பின்னா் 29 மாணவ, மாணவியரும் நலமுடன் பள்ளிக்குத் திரும்பினா்.

இதையடுத்து வட்டாட்சியா் வல்லமுனியப்பன் மற்றும் காவல்துறை டிஎஸ்பி சங்கீதா ஆகியோா் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் கேண்டினீல் மீதமிருந்த பப்ஸை கைப்பற்றி சோதனைக்காக எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.