மேட்டூா் அணையின் நீா்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாகநீடிக்கிறது.
காவிரியின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நீா்வரத்து 4ஆவது நாளாக விநாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 21,500 கன அடி வீதம் நீா்மின் நிலையங்கள் வழியாகவும், வெள்ள நீா் விநாடிக்கு 4,500 கன அடி வீதம் உபரிநீா் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
24ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் தொடா்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.