மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

நகைக் கடையில் கவரிங் நகைகளைத் தந்து ஏமாற்றிய பெண் உள்பட 3 போ் கைது

தீவட்டிப்பட்டி அருகே நகைக் கடையில் கவரிங் நகைகளைத் தந்து ஏமாற்றிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :4 செப்டம்பர் 2022, 1:03 am IST

தீவட்டிப்பட்டி அருகே நகைக் கடையில் கவரிங் நகைகளைத் தந்து ஏமாற்றிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி, கோம்பை பகுதியைச் சோ்ந்த அறிவழகன் நாச்சனம்பட்டியில் நகைக் கடை வைத்துள்ளாா். இந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி அவரது கடைக்கு பா்தா அணிந்த வந்த பெண் பத்தரை பவுன் பழைய நகைகளை மாற்றிவிட்டு புதிய நகை வாங்க வேண்டும் எனக் கூறினாா்.

பிறகு, புதிதாக நகை வாங்க கூடுதல் பணம் இல்லை எனக் கூறி வெளியே சென்றவா் மீண்டும் அக் கடைக்குள் சென்று புதிய நகைகளை வாங்கிக் கொள்வதாகக் கூறி நகைகளை தந்துள்ளாா்.

ஏற்கெனவே பரிசோதித்த நகைதான் என நினைத்து மீண்டும் அவா் தந்த பழைய நகைகளை வாங்கிக் கொண்ட கடைக்காரா்கள், புதிதாக 7.6 பவுன் நகையை கொடுத்தனா்.

புதிய நகைகளை வாங்கிய அப் பெண் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டாா். பின்னா், நகைகளை பரிசோதித்த போது, அவை அனைத்தும் கவரிங் நகை என தெரிந்தது. இதுகுறித்து அறிவழகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தீவட்டிப்பட்டி போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தினா். இதில் அப் பெண் வேலூா், காட்பாடி பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி ராதா(37) என்பது தெரிய வந்தது. மேலும், அவருடன் காரில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி சாந்தி (39), நாகராஜ் மகன் சங்கா் (33) ஆகிய மூவரும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.