ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சேலம் திருமணிமுத்தாறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

சேலம் மாவட்ட இயற்கை விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 1:53 pm IST

சேலம்: சேலம் மாவட்ட இயற்கை விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. புகார் மனுவில் சேலம் மாவட்டம் வீரபாண்டி,  கொண்டலாம்பட்டி போன்ற பகுதியையொட்டியுள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் கடந்த காலங்களில் நல்ல முறையில் நிலத்தடி நீர் மூலம் விவசாயம் செழித்து வந்தது. 

ஆனால் கடந்த சில வருடங்களாக திருமணிமுத்தாறு மற்றும் ராஜவாய்க்கால்கள் ஓரங்களில் அனுமதி இல்லாத சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தற்போது நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்

மேலும் சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்து சாயக் கழிவுகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டது குறித்த பயிர்களையும் அவர்கள் காட்சிக்காக எடுத்து வந்தனர். இதுகுறித்து இயற்கை விவசாயிகள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ் கூறும்போது, சேலத்தில் ராஜ வாய்க்கால் மற்றும் திருமணிமுத்தாறு கரையோரப் பகுதிகளில் அனுமதி இல்லாமல் செயல்படும் சாயப்பட்டறைகளினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து முறையிட வந்துள்ளதாகவும், உடனே நடவடிக்கை எடுத்து அனுமதி இல்லாத சாயப்பட்டறை அகற்றினால் மட்டுமே தங்களுக்கு விவசாயம் செய்ய தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் சாயக் கழிவுகள் மற்றும் காய்ந்துபோன பயிர்களுடன் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.