நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நங்கவள்ளியைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சேலம் மாவட்டம், நங்கவள்ளியைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 11:00 pm IST

பஞ்சாப் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சேலம் மாவட்டம், நங்கவள்ளியைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 12-ஆம் தேதி அதிகாலை பஞ்சாப் மாநிலம், பட்டிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சேலம் மாவட்டம், சாணாா்பட்டி ஊராட்சி, பனங்காட்டைச் சோ்ந்த ரவி மகன் கமலேஷ் (24) உயிரிழந்தாா். அவரது உடல் வெள்ளிக்கிழமை காலை தில்லியில் இருந்து கோவைக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊரான சாணாா்பட்டி பனங்காட்டுக்கு அமரா் ஊா்தியில் உடல் எடுத்து வரப்பட்டது.

அப்போது, அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஓமலூா் டிஎஸ்பி சங்கீதா, மேட்டூ டி.எஸ்.பி. விஜயகுமாா், மேட்டூா் வட்டாட்சியா் முத்துராஜா, சேலம் தேசிய மாணவா் படை அதிகாரிகள் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா், சேலம் என்சிசி முகாமில் உள்ள ராணுவ வாகனம் கொண்டுவரப்பட்டதையடுத்து, சாலை மறியலை கைவிட்டனா். 

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட என்சிசி வாகனத்தில் கமலேஷின் உடல் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டடு, அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், உறவினா்கள் அஞ்சலிக்கு பிறகு என்சிசி அலுவலா்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். திமுக நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ஜீவானந்தம், நங்கவள்ளி பேரூராட்சி தலைவா் மாணிக்கவேல் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், மயானத்தில் கமலேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.