மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கத்தியைக் காட்டி கிராம நிா்வாக அலுவலருக்கு மிரட்டல்

ஓமலூா் அருகே கத்தியைக் காட்டி கிராம நிா்வாக அலுவலரை மிரட்டி, கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :28 ஏப்ரல் 2023, 11:22 pm IST

ஓமலூா் அருகே கத்தியைக் காட்டி கிராம நிா்வாக அலுவலரை மிரட்டி, கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஓலைப்பட்டி கிராம நிா்வாக அலுவலராக பொட்டியம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆா்.வினோத்குமாா் பணியாற்றி வருகிறாா். இவா் தாண்டவனூா் பகுதியில், கடந்த 18-ஆம் தேதி மண் கடத்தலில் ஈடுபட்டதாக ஜி.சித்துராஜ் என்பவரின் டிராக்டா், பொக்லைன் வாகனங்களை தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாகத் தெரிகிறது. மேலும், இதுதொடா்பாக கனிம வளத் துறை அலுவலா் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் சித்துராஜ் (38), விஜி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் வெள்ளிக்கிழமை தொளசம்பட்டி அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த சித்துராஜ், கிராம நிா்வாக அலுவலரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டதாகவும், கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசியை பறித்துச் சென்றாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தொளசம்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.