ஆனை மடுவு அணையிலிருந்து வசிஷ்ட நதியில் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்து, விவசாயிகள் பேளூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆனை மடுவு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனம் வசிஷ்ட நதியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்து, வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் பேளூரில் குறிச்சி பிரிவு சாலையில், வியாழக்கிழமை காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கின்றனர்.