இதுதவிர 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட செட்டிசாவடி திடக்கழிவு மேலாண்மை திடல் பகுதியில் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் கருதி சுற்றிலும் கம்பிவேலி, கண்காணிப்பு கேமரா அமைக்கவும், வாகனங்கள் எளிதாக சென்று வர ஏதுவாக ரூ. 2.58 கோடியில் கான்கிரீட் சாலைகள் அமைக்கவும், இரவு நேரங்களில் திடக்கழிவு வாகனங்களை இயக்கிட ஏதுவாக உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல திடக்கழிவுகளை அளவீடு செய்ய எடை மேடை அமைக்கவும், மக்காத மறு சுழற்சி செய்யக்கூடிய 99 டன் கழிவுகளை செயலாக்கம் செய்திட ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.