ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எல்பிஜி தட்டுப்பாடு: விறகு அடுப்பிற்கு மாறிய ஸ்ரீரங்கம் கோயில் அன்னதானம்!

ஸ்ரீரங்கம் கோயிலில் விறகு அடுப்பில் அன்னதானம்..

News image

அன்னதானம்

DPS

Updated On :26 மார்ச் 2026, 9:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில், தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் விறகு அடுப்பில் சமைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இதில் தினசரி சுமார் 3,000 பேருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மதிய அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்குச் சோறு, சாம்பார், ரசம், மோர், இரண்டு வகை கூட்டு மற்றும் ஊறுகாய் என அறுசுவையான உணவு பரிமாறப்படுகிறது.

தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கேஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால் அன்னதானப் பணியை நிறுத்தாமல் தொடர்வதற்காக, கோயில் நிர்வாகம் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

கரோனா காலத்தில் கூட இத்தகைய சவால்களைச் சந்திக்கவில்லை. தற்போது அன்னதானம் தடைபட்டுவிடுமோ என்ற அச்சமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது என ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விறகு வாங்குவதிலும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்னரே ஆர்டர் கொடுத்தால் மட்டுமே, ஒரு வார காலதாமதத்திற்குப் பிறகு விறகு வந்து சேர்கிறது. தற்போது இருப்பு உள்ள விறகு மற்றும் கிடைக்கும் சொற்ப அளவு கேஸ் சிலிண்டர்களைக் கொண்டு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இக்கட்டான போர்ச்சூழல் போன்ற தட்டுப்பாடு விரைவில் நீங்கி, இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, ஸ்ரீரங்கம் கோயில் அன்னதானத் திட்டத்திற்குத் தேவையான எரிவாயுவை முன்னுரிமை அடிப்படையில் தங்குதடையின்றி ஒதுக்கித் தர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Summary

At the Sri Ranganathaswamy Temple in Srirangam, Trichy, the Annadanam (free food offering) provided to devotees is now being cooked over wood-fired stoves due to the prevailing shortage of cooking gas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.