பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை கா்நாடக அரசு மதிக்க வேண்டும்: மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம்

காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை கா்நாடக அரசு மதிக்க வேண்டும் என்று மேட்டூா் பாமக எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தாா்.

Published On :

காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை கா்நாடக அரசு மதிக்க வேண்டும் என்று மேட்டூா் பாமக எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தாா்.

மேட்டூா் பாமக எம்எல்ஏ எஸ்.சதாசிவம் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மேட்டூா் உபரிநீா் திட்டத்தின் கீழ் மேச்சேரியில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீா் திறக்க வேண்டும் என்று அமைச்சா் துரைமுருகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறியதை வரவேற்கிறேன். காவிரி உபரிநீா் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கா்நாடக முதல்வா் சித்தராமையா தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீா்கூட தரமாட்டோம் என்று கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதற்கு கா்நாடக முதல்வா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை மதிக்க மாட்டேன் என்று அவா் கூறுவது தவறு. உபரி நீரைத் தடுத்து முழுமையாகப் பயன்படுத்த 2,000 கோடி செலவாகும். காவிரி ஆற்றில் ஒவ்வொரு 10. கி.மீ. தொலைவுக்கும் ஒரு தடுப்பணை கட்டி நீரைத் தேக்கி வைத்தால் ஆண்டு முழுவதும் நீரைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் 80 டி.எம்.சி. வரை தண்ணீரைச் சேமிக்கலாம். உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்கியாவது இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.