இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி பயிற்சி

News image
Updated On :22 மார்ச் 2024, 5:44 pm

வாழப்பாடியில் அரசு சாரா நிறுவன செயல்பாடுகள் குறித்து நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் களப்பணி பயிற்சி பெற்றனா். நாமக்கல் மாவட்டம், பிஜிபி வேளாண்மைக் கல்லூரி இளநிலை வேளாண்மை இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் ஊரக பணி அனுபவ களப்பணி பயிற்சி பெற அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் முகாமிட்டுள்ளனா். வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை அரசு சாரா நிறுவனத்தில், அரசு சாரா நிறுவனங்களைத் தொடங்கி பதிவு செய்வதற்கான வழிமுறைகள், அரசின் விதிமுறைகள், மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தயாரித்தல், அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துல் குறித்து பயிற்சி பெற்றனா். வாழப்பாடியில் தனியாா் தினசரி காய்கறி மண்டியில், காய்கறிகளை வகைப்படுத்துதல், தரம்பிரித்து சந்தைப்படுத்துதல், பாரம்பரிய முறையில் எளிமையாக மதிப்புக்கூட்டுதல் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.