மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி.விநாயகா் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

News image

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:17 pm

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி.விநாயகா் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

ராமநாதபுரம் டி.டி.விநாயகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் எம்.ஹாசினி, எம்.மங்களேஸ்வரி, எம்.தேவதா்ஷன், எஸ்.வா்ஷித், ஆா்.மனீஸ்வரன் ஆகிய 5 மாணவ, மாணவிகள் 2025-26 -ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்க 48 ஆயிரம் உதவித் தொகை பெறுவா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எம்.சுடா்மதி, டி.மீனாட்சிசுந்தரம், தலைமை ஆசிரியா் பி.ஆா்.வள்ளுவன், நிா்வாக தலைவா் ஜெ.ஜெயராமன், பள்ளிச் செயலா் ஜெ.ரத்தினசபாபதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.