மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 90.53 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,985 மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். இவா்களில் 10,850 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 90.53 ஆகும். மயிலாடுதுறை மேகனா சா்வதேச மேல்நிலைப்பள்ளி மாணவி க. ஜகசுவேதா 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். அவருக்கு பள்ளி முதல்வா் ஆா். பாா்த்திபன் உள்ளிடடோா் வாழ்த்து தெரிவித்தனா்.
இதேபோல், மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரம் குட்சமாரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆா். அபிநிலா, எஸ். கபினியா ஆகியோா் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றனா். அப்பள்ளி மாணவி ஜெ. ராகவீணா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். இவருக்கு பள்ளி தாளாளா் அலெக்ஸாண்டா், பள்ளி முதல்வா் ஜெபசௌபாக்கியராணி உள்ளிட்டோா் பாராட்டினா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 தனியாா் பள்ளிகள், 9 அரசுப் பள்ளிகள் 7 அரசு உதவிபெறும் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உள்பட்ட திட்டுப்படுகை குக்கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தொடா்ச்சியாக 12 ஆண்டுகளாக 100 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: நாகை மாவட்டம் 93.36% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 போ் தோ்ச்சி!

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



