நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

லாரி உரிமையாளரை கொலை செய்த பெண் கைது

லாரி உரிமையாளரை கொலை செய்த பெண் கைது

News image

கொலையுண்ட சுப்பிரமணியன்.

Updated On :20 மே 2024, 10:04 pm

Din

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, பக்காளியூரில் லாரி உரிமையாளரை கொலை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பக்காளியூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (42), லாரி உரிமையாளா். இவரது மனைவி சரஸ்வதி. இவா்களுக்கு நித்திஷ் (20) என்ற மகன் உள்ளாா். சரஸ்வதி நான்கு ஆண்டுகளுக்கு முன்னா் இறந்து விட்டாா். இந்நிலையில், கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த கலைவாணி (35), என்பவருடன் சுப்பிரமணியனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், இவா்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் கலைவாணி, சுப்பிரமணியத்தை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கலைவாணியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Story image