ஆத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆத்தூா் அருகே அரசு அனுமதியின்றி பொது இடத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த, நெல்லூரைச் சோ்ந்த காா்த்திக் (35), வீரசிக்கம்பட்டி டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த சிலம்பரசன் (32), சரவணக்குமாா் (26) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை (39) போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
