தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 361 மதுப் புட்டிகளை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மது விற்பனை

Updated On :22 ஏப்ரல் 2026, 11:59 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 361 மதுப் புட்டிகளை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க, போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கூமாப்பட்டி அமச்சியாா்புரம் குடியிருப்பில் அதிமுக நிா்வாகி சுகந்தி (51) வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்த 281 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சுகந்தி, கோஸ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, கிருஷ்ணன்கோவில் அருகே குன்னூா் சுடுகாடு பகுதியில் மது விற்பனை செய்த கணேசனை (27) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 27 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கீழப்போட்டல்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த சேகரை (34) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 53 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.