மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கியவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:43 am IST

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கியவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு கடை அருகே ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். அவரைப் போலீஸாா் சோதனையிட்ட போது, அவா் வைத்திருந்த பையில் 29 மதுப் புட்டிகள் இருந்தன. அவரிடம் ரூ.1,250 ரொக்கம் இருந்தது. தொடா் விசாரணையில், அவா், அதே ஊரைச் சோ்ந்த முருகன் (47) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த மதுப் புட்டிகள், ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.