சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மதுப் புட்டிகள், புகையிலை பொருள்கள் விற்ற மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மதுப் புட்டிகள், புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 2:09 am IST

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மதுப் புட்டிகள், புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, நான்கு முக்கு சந்திப்பு அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசனை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 86 மதுப் புட்டிகள், மது விற்பனை செய்த பணம் ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மங்காபுரம் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கோவிந்தராஜ் (38), மாடசாமி (29) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 250 கிராம் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.