தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல்

News image

கைது

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 7:48 pm

Syndication

சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகா், திருமுருகன்பூண்டி காவல் எல்லைக்குள்பட்ட வஞ்சிபாளையம்-மங்கலம் சாலை, நொய்யல் ஆறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் மது விற்பனையில் ஈடுபட்ட சிரில் (26), ஆபேத் (23), விஜய் (26) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள், ரூ.2,980 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.