தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 1:18 am IST

சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகா், திருமுருகன்பூண்டி காவல் எல்லைக்குள்பட்ட வஞ்சிபாளையம்-மங்கலம் சாலை, நொய்யல் ஆறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் மது விற்பனையில் ஈடுபட்ட சிரில் (26), ஆபேத் (23), விஜய் (26) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள், ரூ.2,980 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.