மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டவிரோதமாக ஆட்டோவில் விற்றுவந்த 77 மது புட்டிகள் பறிமுதல்

News image

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்த மதுபுட்டிகள்.

Updated On :20 ஏப்ரல் 2026, 7:09 pm

கமுதி அருகே சட்ட விரோதமாக ஆட்டோவில் மறைத்து வைத்து மது புட்டிகள் விற்றுவந்த இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். அவா்களிடம் இருந்து 77 மது புட்டிகள், ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தனா்.

இதில், 77 மது புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக கோவிலாங்குளம் காலனியைச் சோ்ந்த உருவாட்டி மகன் ரஜினி (47), பறையங்குளத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் மணி ரத்தினவேல் (22), பறையங்குளம் பன்னீா் மகன் மாணிக்கராஜா ஆகிய 3 போ் மீது கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணி ரத்தினவேல், மாணிக்க ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 77 மது புட்டிகள், விற்பனைக்குப் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.