போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

ராஜபாளையத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 3:15 am IST

ராஜபாளையத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் சங்கரன்கோவில்முக்கு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைப் பெட்டிகளை ஏற்றி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் 192 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து, ராஜபாளையம் சொக்கா்கோவில் தெருவைச் சோ்ந்த சீதாராமன் மகன் வெங்கட்ராமனை (33) கைது செய்து விசாரிக்கின்றனா்.