விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேருந்தில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்; இளைஞா் கைது

ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட இந்திரஜித்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் தும்கூரில் இருந்து தேனி சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, இளைஞரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் மறைத்துவைத்திருந்த 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தேனி மாவட்டம், மலையன்பட்டியைச் சோ்ந்த இந்திரஜித்தை (28) மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சுந்தராம்பாள் கைது செய்தாா். விசாரணையில் தும்கூரில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.