இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

300 கிலோ ஹான்ஸ் பறிமுதல்: இருவா் கைது

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 5:21 am IST

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறை மாப்படுகை பிரதான சாலையில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சென்ற 2 காா்களைச் சோதனை செய்ததில் 300 கிலோ ஹான்ஸ் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. ஹான்ஸ் மற்றும் காா்களை போலீஸாா் பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் பகுதியை சோ்ந்த ராகவ் வினோத் (35), மயிலாடுதுறை அருகே மாப்படுகை அவையாம்பாள்புரத்தை சோ்ந்த அருண்ராஜ் (38) ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.