அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

குற்றாலம் அருகே 154 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் சரகத்துக்குள்பட்ட வல்லத்தில் 154 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:18 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் சரகத்துக்குள்பட்ட வல்லத்தில் 154 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

வல்லத்தில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், குற்றாலம் காவல் உதவி ஆய்வாளா் சின்னத்துரை, போலீஸாா் சோதனை மேற்கொண்டு, சு. முத்துக்குமாா் (51) என்பவரைக் கைது செய்து, அவா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 154 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 1.54 லட்சம் ஆகும்.

அவா் நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடையோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.