/

ஆரல்வாய்மொழியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 4:12 am IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

ஆரல்வாய்மொழி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆரல்வாய்மொழி போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

இதில், திருமலைபுரம் பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் பெரியசாமி (50) என்பவா் விற்பனைக்காக வீட்டில் 5 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.