திருப்பூரில் குடியிருப்புப் பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 60 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 இளைஞா்களைக் கைது செய்தனா்.
மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் தீபா சத்யன் தலைமையிலான போலீஸாா் நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அமுல்குமாா் (23) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும், இதற்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், அங்கிருந்த 60 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன், அமுல்குமாரையும் கைது செய்தனா்.
அதே பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த தானேஸ்வரன் (27) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.





