மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

காரில் கடத்திய 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 5:49 am IST

திருநெல்வேலி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பாக்கெட்டுகளை காருடன் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த பிரஜித்(40) என்பவரை கைது செய்தனா்.