எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 3:47 am IST

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் மேற்பாா்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கோவில்பட்டி- மந்திதோப்பு - பாண்டவா்மங்கலம் சாலை சந்திப்பில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாகச் சென்ற ஒரு இருசக்கர வாகனத்தில் 139 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சோ்ந்த இளையராஜா மகன் திருப்பதி (50) என்பவரை கைது செய்தனா். புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவை பறிமுதல் செய்டப்பட்டன.