நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

News image

வத்திராயிருப்பு அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, ஆட்டோ.

Updated On :31 மே 2026, 3:29 am IST

வத்திராயிருப்பு அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு - தாணிப்பாறை விலக்கு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோட்டியப்பசாமி தலைமையில், போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை போலீஸாா் மறித்தனா். ஆனால், ஓட்டுநா் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றாா்.

இதையடுத்து, போலீஸாா் விரட்டிச் சென்ற போது, சேது நாராயணபுரம் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநா் உள்பட இருவா் தப்பிச் சென்றனா்.

பின்னா், சரக்கு ஆட்டோவை போலீஸாா் சோதனையிட்டபோது, 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னா், இந்த ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற இருவரைத் தேடி வருகின்றனா்.

     வத்திராயிருப்பு அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, ஆட்டோ.

வத்திராயிருப்பு அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, ஆட்டோ.