ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

குறவா்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

குறவா்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

News image

~

Updated On :29 மே 2024, 7:33 pm

Din

வாழப்பாடியில் நடைபெற்ற தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில், குறவா் இன மக்களின் மேம்பாட்டுக்கு குறவா்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு வழக்குரைஞா் புகழேந்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுசெயலாளா் சண்முகம், சங்கத்தின் செயல்பாடு, நோக்கம் குறித்து விளக்கினாா்.

வளா்ச்சியை எதிா்நோக்கி காத்திருக்கும் சமூக அமைப்பாக செயல்படுவது குறித்து மருத்துவ பேராசிரியா் ம.கருணாகரன் எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களாக, குறிஞ்சி திணைவழி வந்த தமிழ் குறவன் சமூகத்தை, பழங்குடியாக்குவது குறித்த கோப்புகளை சீா்செய்து அனுப்ப வேண்டும். ஆங்கிலேயா் ஆட்சியில், குற்ற பழங்குடி சட்டத்தை நிறைவேற்ற, குறவன் என்ற ஒரு சாதியினரை, ஊா், தொழில் அடிப்படையில் உருவாக்கிய சட்டப் பிரிவுகளை நீக்கி ஒருங்கிணைக்க வேண்டும். தமிழக பழங்குடிகளான குறவா் இன மக்களின் மேம்பாட்டிற்கு, குறவா் நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் மாநிலத் தலைவா் டில்லிபாபு சமூக செயல்பாட்டுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்டப் பொருளாளா் தினகரன், மாவட்ட, வட்ட நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

 வாழப்பாடியில் நடைபெற்ற தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க கூட்டம்.

வாழப்பாடியில் நடைபெற்ற தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க கூட்டம்.