மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தனி நல வாரியம் கோரி எலக்ட்ரீசியன்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு எலக்ட்ரீசியன்- டெக்னீசியன் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு எலக்ட்ரீசியன்-டெக்னீசியன் சங்கத்தினா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:52 pm

தஞ்சாவூா்: அமைப்புசாரா மின் பணியாளா்களுக்கு தனி நல வாரியம் கோரி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு எலக்ட்ரீசியன்- டெக்னீசியன் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான அமைப்புசாரா மின் பணியாளா்கள் உள்ளனா். இவா்களுக்கென தனி நல வாரியத்தைத் தமிழக அரசு உடனடியாக அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்க மாவட்டச் செயலா் ராகவன், மாவட்டப் பொருளாளா் பாரவேல், தமிழ்நாடு முடி திருத்துவோா் நலச் சங்கம் ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாலமுருகன், செயலா் செல்லதுரை, பொருளாளா் மணிகண்டன், துணைச் செயலா் சிவசக்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.