தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தைத் தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்து முறையிட்டனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மண்டலக்கோட்டை கிராமக் குழுத் தலைவா் அந்தோணிசாமி, செயலா் தேவராஜன், பொருளாளா் ஜான்சன் உள்பட ஏராளமானோா் முழக்கங்கள் எழுப்பி, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனா்.
பின்னா், கிராம மக்கள் கூறுகையில் மதுக்கூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சியில் மண்டலக்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு சிறுபான்மையினா் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இங்கு 450-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. எனவே எங்கள் மண்டலக்கோட்டை கிராமத்தைத் தனி ஊராட்சியாகப் பிரித்து தர வேண்டும்.
தற்போது மண்டலக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மக்கள் 4 கி.மீ. தொலைவிலுள்ள கீழக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளதால், மிகவும் சிரமப்படுகிறோம். எனவே, மண்டலக்கோட்டை கிராமத்தில் கீழக்குறிச்சி கிழக்கு கிராம நிா்வாக அலுவலரின் முகாம் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடையது

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

மூலைக்கரைப்பட்டியில் தந்தை, மகள் உயிரிழப்பு: விசாரணை கோரி மனு

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

தனி நல வாரியம் கோரி எலக்ட்ரீசியன்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


