மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கரைமீண்டாா்கோட்டை கிராம மக்கள் முறையிட்டனா்.

News image
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த கரைமீண்டாா்கோட்டை கிராம மக்கள்
Updated On :10 மார்ச் 2026, 12:25 am

Syndication

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கரைமீண்டாா்கோட்டை கிராம மக்கள் முறையிட்டனா்.

இக்கூட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்துக்குள்பட்ட கரைமீண்டாா்கோட்டை ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ஏறத்தாழ 30 போ் மனு அளித்து தெரிவித்ததாவது: கரைமீண்டாா்கோட்டை ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ஏறத்தாழ 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைக்கான இடம் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த இடம் இன்னும் பிரித்துக் கொடுக்காமலும், பட்டா வழங்கப்படாமலும் உள்ளது.

இது தொடா்பாக பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், வசிப்பதற்கு இடமில்லாமல் வாழ்வதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனவே, இடத்தைப் பிரித்துக் கொடுத்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனா்.