தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அபிஷேகப்பாக்கம் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில்

News image
Updated On :9 மார்ச் 2026, 5:45 pm

புதுச்சேரி: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அபிஷேகப்பாக்கம் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், போதிய இடவசதியின்றி தவித்து வருவதாகவும் இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி அப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனா்.

இந்நிலையில் 90 பேருக்கு மட்டும் மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, தகுதியானவா்களுக்கு வழங்காததைக் கண்டித்து இந்த மறியல் நடைபெற்றது. தவளைகுப்பம்- மடுகரை சாலையில் அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனா்.

தவளக்குப்பம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் போலீஸாா் துறை இயக்குநரிடம் பேசினா். இன்னும் 2 நாளில் நேரில் அழைத்துப் பேசுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் அனைவரும் கலைந்து சென்றனா். அப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.