பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஜம்பை பேரூராட்சி, வேப்பங்காட்டுபுதூா் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் பவானி-அந்தியூா் சாலையில் நல்லிபாளையம் பிரிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் சரி செய்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...