தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை கம்பம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், சுமாா் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பெரியகுளம் - கம்பம் சாலையில் உள்ள இந்திராபுரி தெரு 30-ஆவது வாா்டுப் பகுதி ஆகும். இந்தத் தொகுதியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் வழங்கப்படவில்லை எனவும், விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து அப்பகுதி மக்கள் கம்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பெரியகுளம் காவல்நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், கம்பம் சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


