பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

அவிநாசி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

குடிநீா் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :26 மார்ச் 2026, 2:10 am IST

அவிநாசி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குள்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் சீராக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பா விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா் சாலை மறியலில் புதன்கிழமை காலை ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குத அவிநாசி போலீஸாா் சென்று, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா் ஆகியோருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில் ஓரிரு நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.