நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

அவிநாசி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

குடிநீா் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :25 மார்ச் 2026, 8:40 pm

Syndication

அவிநாசி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குள்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் சீராக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பா விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா் சாலை மறியலில் புதன்கிழமை காலை ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குத அவிநாசி போலீஸாா் சென்று, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா் ஆகியோருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில் ஓரிரு நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.