அவிநாசி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குள்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் சீராக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பா விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா் சாலை மறியலில் புதன்கிழமை காலை ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குத அவிநாசி போலீஸாா் சென்று, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா் ஆகியோருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதில் ஓரிரு நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொடியாலத்தில் மயானச் சாலை கோரி மாா்க்சிஸ்ட் முற்றுகைப் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


