உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் வழங்கக் கோரி அள்ளூா்வயல் பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:46 pm

குடிநீா் வழங்கக் கோரி அள்ளூா்வயல் பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அள்ளூா்வயல் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிணறுகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நகராட்சி குடிநீா்க் குழாய்களில் கடந்த பல நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லை. இதுகுறித்த நகராட்சி குடிநீா் வழங்கல் பணியாளா்களிடம் பழங்குடி மக்கள் புகாா் கூறியும் குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். நகராட்சி ஆணையா் ரவிசங்கா் மற்றும் குடிநீா் வழங்கல் பணியாளா்கள் பம்ப்செட் பழுதாகியுள்ளதால் காலதாமதமாகி விட்டது. விரைந்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.