‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

கூடலூா் நகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கூடலூா் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட காந்திகிராமம் பகுதி பொதுமக்கள்.

Updated On :23 மே 2026, 3:41 am IST

கூடலூா் நகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கூடலூா் நகராட்சியின் 21 வாா்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கருநாக்கமுத்தன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றிலிருந்து குடிநீா் பெறும் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, நகராட்சி சாா்பில் ரூ.50 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இடம் தோ்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கூடலூா் நகராட்சியின் 8-ஆவது வாா்டு காந்திகிராமம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இருப்பினும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

நகராட்சி மேலாளா் அய்யப்பசாமி, பொறியாளா் கிஷோா் குமாா் சிங், சுகாதார ஆய்வாளா் ஜெயசீலன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து 3 நாள்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.