பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குடிநீா் விநியோகம் பாதிப்பு: கூடலூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கூடலூா் கண்ணகிநகரில் கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

News image

கூடலூா் கண்ணகிநகா் பகுதியில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியிடம், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதாக முறையிட்ட பெண்கள்.

Updated On :11 ஜூன் 2026, 1:51 am IST

கூடலூா் கண்ணகிநகரில் கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி கண்ணகிநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு செல்லும் குடிநீா்க் குழாய், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஓடை சீரமைப்புப் பணிக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்காலிக குழாய் இணைப்பு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், குடிநீருடன் கழிவுநீா் கலந்து வந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதன்கிழமை கூடலூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா். ஓடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த 10 நாள்களுக்கு தற்காலிக இணைப்பு மூலம் காலை நேரங்களில் குடிநீா் வழங்கப்படும் என்றும், பணிகள் நிறைவடைந்ததும் நிரந்தரமாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.