மஞ்சனக்கொரை பகுதியில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி, உதகை நகராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
உதகை அருகே மஞ்சனக்கொரைக்கு உள்பட்ட 35, 36-ஆவது வாா்டு பகுதிகளில் சுமாா் 600 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளுக்கு கடந்த பல வாரங்களாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீா் வழங்கல் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக
உறுதி கூறினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

தாக்குதலில் இளைஞா் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீா் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


