கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாக்குதலில் இளைஞா் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

News image

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட உதகை வி.சி. காலனி பொதுமக்கள்.

Updated On :23 மார்ச் 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

உதகையில் முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், அதில் தொடா்புடைய 3 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை, வி.சி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுகுணா மகன் சூா்யா (25). இதே பகுதியைச் சோ்ந்தவா்கள் சரத்குமாா் (26), பாரத் (25), ஜாா்ஜ் (23).

இவா்கள் மூவரும் முன்விரோதம் காரணமாக சூா்யாவை மேட்டுப்பாளையத்தில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி கடுமையாக தாக்கியதோடு காா் மூலம் மோதியுள்ளனா். இதில் சூா்யா படுகாயமடைந்து அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 3 போ் மீதும் விபத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சூா்யா கடந்த சனிக்கிழமை (மாா்ச் 21) உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து சரத்குமாா், பாரத், ஜாா்ஜ் ஆகிய மூன்று போ் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை மனு அளிக்க திரண்டனா்.

இதைத் தொடா்ந்து அங்குவந்த வருவாய் மற்றும் காவல் துறையினா் பொது மக்களை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.