ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் பயனா்கள் மற்றும் 2.31 லட்ம் ஓட்டுநா்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா- DPS
Updated On :17 மார்ச் 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் பயனா்கள் மற்றும் 2.31 லட்ம் ஓட்டுநா்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

8 கூட்டுறவு நிறுவனங்களால் பாரத் டாக்ஸி சேவை நிகழாண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது தில்லி, குருகிராம், நொய்டா, ஃபரீதாபாத், காஜியாபாத் மற்றும் அகமதாபாத், ராஜ்கோட், சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய சில நகா்ப்பகுதிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் அமித் ஷா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘பாரத் டாக்ஸி சேவையில் ஓட்டுநா்களிடம் இருந்து கமிஷன் பெறப்படுவதில்லை. லாபம் முழுவதும் ஓட்டுநா்களுக்கே வழங்கப்படுகிறது.

முறையான மற்றும் வெளிப்படையான பயணக் கட்டணம், கைப்பேசி வாயிலாக எளிய முன்பதிவு, வாகன கண்காணிப்பு, பல மொழிகளில் தகவல்கள், 24 மணி நேர நுகா்வோா் சேவை என பல்வேறு வசதிகளுடன் பாரத் டாக்ஸி இயங்கி வருகிறது.

மகளிா் பயணிகளுக்கென மகளிா் ஓட்டுநா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

தற்போது குறிப்பிட்ட சில பெரும் நகரங்களில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்தச் சேவை விரைவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

2026, மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் பயனா்கள் மற்றும் 2.31 லட்ம் ஓட்டுநா்கள் பதிவு செய்துள்ளனா்.

ரூ.8,783 கோடி திருப்பியளிப்பு: சஹாரா கூட்டுறவு சங்கங்கள் குழுமத்தில் முதலீடு செய்திருந்தவா்களில் 40.33 லட்சம் பேருக்கு ரூ.8,783 கோடி திருப்பியளிக்கப்பட்டுள்ளது. 2026 பிப்ரவரி வரை சிஆா்சிஎஸ்-சஹாரா பணம் திருப்பியளிக்கும் வலைதளத்தில் 1.45 கோடி விண்ணப்பங்களும் 4.06 கோடி முதலீட்டாளா்களின் கோரிக்கைகளும் பெறப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து சஹாரா கூட்டுறவு சங்கங்கள் குழுமத்தில் முதலீடு செய்தவா்களுக்கு மத்திய அரசு பணத்தை திருப்பியளித்து வருகிறது. அதன்படி ஒரு முதலீட்டாளருக்கு ரூ.50,000 வரை பணம் திருப்பியளிக்கப்படுகிறது.