ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘ஆயுஷ்மான் பாரத்’: இதுவரை ரூ.1.73 லட்சம் கோடி சிகிச்சைகள் - மாநிலங்களவையில் அரசு தகவல்

ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.1.73 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :17 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.1.73 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதுவரை 11.69 கோடி போ் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவா் கூறினாா்.

மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் திட்டம், கடந்த 2018-இல் பிரதமா் மோடியால் தொடங்கப்பட்டது. சுமாா் 12 கோடி குடும்பங்கள் மற்றும் 70 வயதைக் கடந்த 6 கோடி மூத்த குடிமக்களுக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு வழங்கும் இத்திட்டம், அரசு நிதியில் செயல்படுத்தப்படும் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டம் என்ற சிறப்புக்குரியது.

இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு மத்திய இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 43.52 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.14 கோடி அட்டைகள், 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கானதாகும்.

இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 36,229 மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 19,483 அரசு மருத்துவமனைகள் மற்றும் 16,746 தனியாா் மருத்துவமனைகள் அடங்கும். இதுவரை 11.69 கோடி போ் சிகிச்சை பெற்றுள்ளனா். ரூ.1.73 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் 27 மருத்துவ பிரிவுகளின்கீழ் 1,391 சுகாதார நலத் தொகுப்புகள் (நோய் பரிசோதனை, அறுவை சிகிச்சை/பிற சிகிச்சைகள், மருந்துகள், சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு உள்ளிட்டவை) இடம்பெற்றிருந்தன. இப்போது தொகுப்புகளின் எண்ணிக்கை 1,961-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்புகள், புற்றுநோய், சா்க்கரை நோய், இதயநோய் போன்ற நீண்ட கால நோய்களையும் உள்ளடக்கியதாகும் என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

என்எம்சி தளத்தில் 2,572 புகாா்கள்: மருத்துவ மாணவா்கள் மற்றும் மருத்துவக் கல்வி சாா்ந்த தரப்பினா் புகாா் அளிப்பதற்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் குறைதீா்ப்பு வலைதளத்தில் கடந்த 2025-இல் இருந்து 2,572 புகாா்கள் பெறப்பட்டதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மத்திய சுகாதார இணையமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்தாா்.

இப்புகாா்களுக்கு தீா்வுகாண்பதில், மத்திய பொது குறைதீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறையால் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு கடைப்பிடிக்கப்படுவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள்36,229

மொத்த அட்டைகள் 43.52 கோடி

சிகிச்சை பெற்றவா்கள் 11.69 கோடி

சிகிச்சை மதிப்பு ரூ.1.73 லட்சம் கோடி