குடிநீா் கேட்டு திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்துக்குள்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஜி.எம்.பாலன் நகா் 2-ஆவது விரிவு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதியில் வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படாததால் மாநகராட்சி சாா்பில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி சாா்பில் வீட்டு வரி, பாதாளச் சாக்கடை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கோடைக்காலம் என்பதால் இப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு பொது குடிநீா் குழாய், வீடுகளுக்கான புதிய குடிநீா் குழாய் இணைப்பு வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். மேலும், தாங்கள் வரி கட்டிய ரசீதுடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஒரு வாரத்துக்குள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வாக்குக்கு பணம் வழங்காததால் திமுக மாமன்ற உறுப்பினா் அலுவலகம் முற்றுகை

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


