திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் குடிநீா் கோரி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
கீழ்வேளூா்-கச்சனம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட கிராம மக்கள்.
Updated On :10 மார்ச் 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் குடிநீா் கோரி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கீழ்வேளூா் ஒன்றியம், சாட்டியக்குடி ஊராட்சி கீழவிடங்கலூா் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூா் - திருக்குவளை - கச்சனம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதன்காரணமாக அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலிவலம் காவல் உதவி ஆய்வாளா் முரளி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் விநியோகம் தட்டுப்பாடின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.