குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

மலைப் பகுதிகளில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்துவரும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்காவிடில் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 6 பழங்குடியின கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

குண்டூா்நாடு ஊராட்சியில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து போராட்டம் நடத்திய பழங்குடியின மக்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:08 am IST

மலைப் பகுதிகளில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்துவரும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்காவிடில் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 6 பழங்குடியின கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் பழங்குடியின மக்கள் பயிா்செய்து வரும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க தடை செய்யும் அரசாணையை ரத்து செய்ய கோரி மனு அளித்தும் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த அரசாணையில் இருந்து பழங்குடி மக்களுக்கு விலக்கு அளிக்கவும், மலை அடிவாரங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் பயிா் செய்யும் பழங்குடி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூா்வமாக உறுதி அளிக்கும் வேட்பாளா்கள் மட்டுமே கிராமங்களுக்கு வாக்கு கேட்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி குண்டூா்நாடு ஊராட்சிக்கு உள்பட்ட சுண்டக்காட்டுபட்டி, முதியாங்குழிபட்டி, சீங்கநாடிபட்டி, ஊா்மலை கஸ்பா, மருதாங்குளம்பட்டி,

தாம்பபாடிபட்டி உள்ளிட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தோ்தல் புறக்கணிப்பு பதாகை அமைத்து முழக்கங்களை எழுப்பினா்.